மித்தெனிய முக்கொலை விவகாரம் : பொலிஸ் கான்ஸ்ரபள் ஒருவர் கைது

Aarani Editor
1 Min Read
முக்கொலை

ஹம்பந்தோட்டை, மித்தெனியவில் அண்மையில் நடந்த மூன்று கொலைகள் தொடர்பாக வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஜூலம்பிட்டியவைச் சேர்ந்த 36 வயதுடைய சந்தேக நபர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு 12 வு-56 துப்பாக்கி ரவைகளை வழங்கியுள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

பெப்ரவரி 18 ஆம் திகதி நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் அருண விதானகமகே மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.

விசாரணையின் மூலம் இதுவரை ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *