வடக்கில் பெருந்தொகை கடலட்டைகளுடன் 17 பேர் சிக்கினர்

Aarani Editor
0 Min Read
கடலட்டை

வடக்கு கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 4,255 கடலட்டைகளுடன், 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், மணியத்தோட்டம், உதயபுரம், குருநகர், மற்றும் அரியாலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் 21 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என கடற்படையினர் கூறினர்.

சந்தேகநபர்கள், மேலதிக நடவடிக்கைகளுக்காக, கடலட்டைகள், நான்கு டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்களுடன் யாழ்ப்பாணம் கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *