காட்டு விலங்குகளை வேட்டையாடும் இராட்சதர்கள் : பதுளை நமுனுகுல பகுதியில் பயங்கரம்

Aarani Editor
1 Min Read
காட்டு விலங்கு

பதுளை, நமுனுகுல வனப்பகுதியில் வசிக்கும் எருமைகளை , இறைச்சிக்காக விற்பனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பிரதேச மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

விற்பனைக்காக வெட்டப்பட்ட எருமை மாட்டின் தோல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் நமுனுகுல நகரிலிருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள கனவரல்ல பகுதியில் அமைந்துள்ள குளத்தின் ஓரத்தில் காணப்பட்டதாக மக்கள் கூறினர்.

இந்த சட்டவிரோத செயற்பாடுகள் இரண்டு வருடங்களுக்கு மேலாக நடைபெற்றுவருவதாகவும், கிராமத்தில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் சில மாடுகளை கடத்திச் சென்று, இறைச்சியை விற்று வருவதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து, தற்போது குறித்த குழுவினர் வனப்பகுதியில் இருக்கும் காட்டு எருமைகளை, இறைச்சிக்காக விற்பனை செய்து வருகின்றனர்.

எனவே இந்த குற்றச்செயலில் ஈடுப்படும் குழுவை, கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாரிடமும் இதற்குப் பொறுப்பானவர்களிடமும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *