குஷ் போதைப்பொருளுடன் நாட்டிற்குள் நுழைய முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் வருகை முனையத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 34 வயதுடைய தாய்லாந்து நாட்டவர் எனவும், தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்கவிற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் உணவுப் பொட்டலங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 05 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு சுமார் 52 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Link : https://namathulk.com