சுற்றித்திரிவோருக்கும் ஓய்வூதியம் : அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு

Aarani Editor
1 Min Read
ஓய்வூதியம்

சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு இந்த ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் சமிந்த ரணசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது, சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கான சமூக நலத்திட்டத்தையும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.

அத்துடன், சுற்றுலாத் துறையின் எதிர்காலத்திற்காக 100 சுற்றுலாத் தலங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஒவ்வொரு தலத்திற்கும் 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கான ஓய்வு மையங்களை நிர்மாணிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *