குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட யோஷித ராஜபக்ஷவின் பாட்டி ‘டெய்சி ஆச்சி’ என்றும் அழைக்கப்படும் டெய்சி ஃபாரெஸ்ட்ற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ‘டெய்சி ஆச்சி’ ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் இன்று கைது செய்யப்பட்டார்.
முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஃபாரெஸ்டை கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்களாக பெயரிட்டு நிதி மோசடி சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com
