வீதி விபத்துக்களை தவிர்ப்பதற்காக இலங்கை பொலிஸ் திணைக்களம் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை துல்லியமாக கண்டறியக்கூடிய ஸ்பீட் கன் சாதனங்களை பொலிசார் இறக்குமதி செய்துள்ளனர்.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்பீட் கன் சாதனங்களை இனி போக்குவரத்து பொலிசார் பயன்படுத்தவுள்ளனர்.
இரவில் மிகவும் திறம்பட பயன்படுத்தக்கூடிய இந்த சாதனத்தின் ஊடாக 1.2 கிலோமீட்டர் தொலைவில் பயணிக்கும் வாகனத்தின் வேகம், சாரதியின் புகைப்படம் மற்றும் வாகனத்தின் இலக்கம் உள்ளிட்ட பல தகவல்களைப் பெற முடியும்.
ஸ்பீட் கன் ஊடாக பதிவு செய்யப்படும் வீடியோவை நீதிமன்றத்தில் சாட்சியாக சமர்ப்பிக்கவும் முடியும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணவல தெரிவித்தார்.
Link : https://namathulk.com