குட்டித் தேர்தலில் இளைஞர், பெண்களுக்கான ஒதுக்கீடு : விதிகளை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு

Rajan
By
1 Min Read
தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சி தேர்தலில் 25% இளைஞர்களும், 50% பெண்களும் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல்களில் பெப்ரவரி 01, 2025 அன்று 18 வயது நிரம்பியவர்கள், வாக்களிக்கத் தகுதி பெறுவார்கள் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 31, 2007 அன்று அல்லது அதற்கு முன்பு பிறந்த அனைத்து நபர்களும் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவார்கள் என தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்த முடிவை முறைப்படுத்த, உள்ளூராட்சி தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 76(a) மற்றும் வாக்காளர் பதிவுச் சட்டத்தின் பிரிவு 24(a) ஆகியவற்றின் கீழ், ஆணைக்குழு வர்ததமானியில் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனத்திற்கும் பரிந்துரைக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தேவையான வைப்புத் தொகைகள் பற்றிய விவரங்களையும் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

வழிகாட்டுதல்களின்படி, ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனத்திற்கும் நியமனப் பட்டியல்கள் பிரிவு விகிதாசார மட்டங்களில் தயாரிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நியமனப் பட்டியலிலும் இளைஞர் பிரதிநிதித்துவம் 25 சதவீதத்தை தாண்ட வேண்டும் என்றும் ஆணைக்கழு வலியுறுத்தியுள்ளது.

மேலும், பாலின பிரதிநிதித்துவத் தேவைகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதோடு, பிரதேச அளவிலான வேட்புமனு பட்டியல்களில் குறைந்தது 25 சதவீத பெண் வேட்பாளர்கள் இருக்க வேண்டும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அதே நேரத்தில் விகிதாசார வேட்புமனு பட்டியல்களில் 50 சதவீத பெண் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *