சமீபத்தில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நடந்த பல பண திருட்டுக்கு பின்னால், வெளிநாட்டு தம்பதியர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குருநாகலில் உள்ள ஒரு காய்கறி கடையில் இருந்து வெளிநாட்டு தம்பதியினர் 110,000 ரூபா பணத்தையும், கண்டி பிலிமத்தலாவையில் உள்ள ஒரு சில்லரைக் கடையில் இருந்து 140,000 ரூபா பணத்தையும் திருடியதாக தெரியவந்துள்ளது.
இன்னும் கைது செய்யப்படாத தம்பதிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக செயற்படவேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com