திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்திற்குள் உட்புகுந்த இரண்டு காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்தியுள்ளதோடு, பயன் தரும் தென்னை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளன.
இதன்போது, பிரதேச மக்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர் .
எனினும் வீட்டு உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.
அத்தோடு வீட்டில் இருந்த அரிசி மூடைகளையும் யானைகள் நாசம் செய்துள்ளன.
காட்டு யானையால் பாதிக்கப்பட்ட தமக்கு அரசாங்கம் நஷ்டஈடு தர வேண்டும் எனவும் , யானை பாதுகாப்பு வேலி அமைத்துத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வெருகல் -உப்பூறல் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Link : https://namathulk.com