மீண்டும் அத்துமீறிய இந்திய மீனவர்கள் : இலங்கை கடற்படையிடம் சிக்கிய 14 பேர்
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை என்பது தொடர்கதையாகவே உள்ளது.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான இலங்கை கடற்படையினரின் தேடுதல் வேட்டைகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
அதற்கமைய மன்னார் கடற்பிராந்தியத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையிடம் இந்திய படகொன்று சிக்கியுள்ளது.
குறித்த படகில் மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட இந்திய மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Link : https://namathulk.com