இன்னும் இரண்டு நாட்களில் வானத்தில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் : கழுகுக்கண் பார்வையில் வளிமண்டலவியல் திணைக்களம்

Rajan
By
1 Min Read
வளிமண்டலவியல் திணைக்களம்

எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையில் தற்காலிக மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி நாட்டின் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் உட்பட நாடு பூராகவும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

இரத்தினபுரி, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *