பாடசாலைகளில் அறவிடப்படும் பணம் : பிரதமரின் அதிரடி முடிவு

Aarani Editor
1 Min Read
பாடசாலைகளில் அறவிடப்படும் பணம் : பிரதமரின் அதிரடி முடிவு

பல்வேறு காரணங்களுக்காக பாடசாலைகளில் பணம் அறவிடப்படுவது தொடர்பில் துரித விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தொடர் இன்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் வசூலிப்பது தொடர்பில் கல்வி அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்படும் வேளை, அது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் வலியுறுத்தினார்.

கல்விக் கொள்கைகளை முறையாக செயல்படுத்தாததாலும், அரசியல் தலையீடுகளாலும் பல நெருக்கடிகள் எழுந்துள்ளதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

2026 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள கல்வி சீர்திருத்தத்தில் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல், மனித வளங்களை மேம்படுத்துதல், உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டை நடத்துதல் ஆகியவை அடங்கும் எனவும் பிரதமர் கூட்டிக்காட்டினார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *