சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 13,000 சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து, பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் கண்டியை சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com