2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரை வைப்புத்தொகையைச் சமர்ப்பித்த அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 3 ஆம் திகதி தொடங்கிய வைப்புத்தொகை ஏற்றுக்கொள்ளும் நடைமுறையின்படி, நேற்று முன்தினம் மாலை 4.15 மணி வரை 168 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வைப்புத்தொகை செலுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, 168 உள்ளூராட்சி மன்றங்களில் 18 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 57 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com