கொழும்பில் போட்டியிடவில்லை : குட்டித் தேர்தலில் பின்வாங்கியது தமிழரசுக்கட்சி

Ramya
By
1 Min Read
தமிழரசுக்கட்சி

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை என்று தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பில் போட்டியிடுகின்றமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக பதில் செயலாளர் கூறினார்.

அந்தவகையில், கொழும்பு மாநகரசபையில் தமிழ்மக்கள் வசிக்காத வட்டாரங்களும் உள்ளதாக பதில் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

அங்கு வேட்பாளர்களை நியமிப்பது சவாலான ஒரு நிலைமையை ஏற்ப்படுத்தியுள்ளதாகவும், அங்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டாலும் அதன் வேட்பாளர்களின் பின்புலம் தொடர்பாக ஆராய்வதில் பல்வேறு சவால்கள் உள்ள காரணத்தினால் இம்முறை கொழும்பில் போட்டியிடுவதில்லை என மத்தியசெயற்குழு தீர்மானித்துள்ளதாக பதில் செயலாளர் குறிப்பிட்டார்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *