இலங்கையில் கைதாகியுள்ள தமது மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழக மீனவர்கள் போராட்டம்

Aarani Editor
1 Min Read
தமிழக மீனவர்கள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமது மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற 14 மீனவர்களை கடந்த வியாழக்கிழமை இரவு இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு , மார்ச் 14 வரை வவுனியா சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்களை சிறைப்பிடித்ததைக் கண்டித்தும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை தாயகம் திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *