இலங்கை பாராளுமன்ற வளாகத்திற்குள் சுற்றித் திரியும் நாய்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற வளாகத்திற்குள் சுற்றித் திரியும் நாய்களால் அலுவலக ஊழியர்களுக்கு, அதிகாரிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் தொந்தரவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்தை மேற்பார்வை செய்த சபாநாயகர், அங்கு சுற்றித்திரியும் நாய்களை வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
Link: https://namathulk.com