பெண்களின் பிரச்சினைகளை கேட்டறிய யாழ்ப்பாணம் வந்தார் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

Aarani Editor
1 Min Read
சரோஜா சாவித்திரி போல்ராஜ்

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தமது அமைச்சின் கீழ் கடமையாற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கடமைகளை மக்களுக்கு மேன்மேலும் வினைத்திறனாக வழங்குதல் தொடர்பாக அமைச்சர் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அத்துடன், உத்தியோகத்தர்களின் தேவைப்பாடுகளையும் கேட்டறிந்து நிவர்த்தி செய்வதாகவும் அவர் கூறினார்.

இக் கலந்துரையாடலில், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் மற்றும் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *