ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைய பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பதுளை, கந்தேகெதர பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் என பொலிசார் கூறினர்.
குறித்த பெண், முதலீடுகளுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குவதாக கூறி, சமூக ஊடக தளமான பேஸ்புக்கில் விளம்பரம் செய்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலரை ஏமாற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.
சுமார் 4.5 மில்லியன் ரூபாவைப் மோசடியாக பெற்றுக்கொண்டு பணத்தை திருப்பித் தராமல் தலைமறைவாகியுள்ளதாக கிடைகப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com