யானை-ரயில் மோதல்களைத் தடுக்க கண்காணிப்பு கேமரா அமைப்புகள் பொருத்துதல் உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்தார்.
மனித-யானை மோதலைத் தணிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்த பிரதி அமைச்சர், இரண்டு வாரங்களுக்குள் அவை செயல்படுத்தப்படும் எனவும் கூறினார்.
மனித-யானை மோதலைத் தணிக்க யானை இடம்பெயர்வு பாதைகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
Link: https://namathulk.com