உயர்கல்வி தரம் தொடர்பில் பிரதமர் அதிருப்தி.

Aarani Editor
1 Min Read
பிரதமர்

நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களின் தரம் திருப்திகரமாக இல்லை எனவும், கடந்த காலங்களில் ஏற்பட்ட பின்னடைவுகளே இந்த நிலைமைக்கு வழிவகுத்ததாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அம்பாறையில் உள்ள ஹார்டி மேம்பட்ட தொழில்நுட்ப நிறுவனத்தின் கல ஆய்வில் ஈடுபட்ட போதே பிரதமர் இதனை கூறினார்.

ஒவ்வொரு துறைக்கும் தேவையான தலைவர்களை உருவாக்காமல் இந்த நாட்டை மாற்ற முடியாது என பிரதமர் குறிப்பிட்டார்.

எனவே, கல்வியை சரியான திசையில் கொண்டு செல்லுவதற்கான முயற்சிகளை புதிய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.

கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் முதற்படியாக, தற்போது முழுமையடையாத உட்கட்டமைப்பை நிறைவு செய்யதல், வெற்றிடங்களை நிரப்புதல் , தற்போதுள்ள பாடத்திட்டத்தின் தரத்தை மேம்படுத்தல் போன்ற செயற்றிட்டங்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

எதிர்காலத்தில், பாடசாலை கல்வியிலும் தொழிற்கல்வியை வளர்ப்பதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *