கண்டவுடன் கைது செய்யுங்கள் – தேசபந்து தென்னகோனுக்கு பகிரங்க பிடியாணை

Aarani Editor
1 Min Read
தேசபந்து

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை காணும் இடத்தில் கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது.

2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறையில் உள்ள ஹோட்டல் முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கடந்த மாதம் 28ஆம் திகதி முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு மாத்தறை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இதனையடுத்து தேசபந்து தென்னக்கோனுக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக தேசபந்து தென்னக்கோன் தற்போது தலைமறைவாக உள்ளார்.

இந்தநிலையில், காணும் இடத்தில் அவரைக் கைது செய்வதற்கான பகிரங்க பிடியாணையை மாத்தறை நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *