ரயில் பயணிகளின் களியாட்டத்திற்கு விசேட ரயில் சேவைகள்

Aarani Editor
1 Min Read
ரயில் சேவைகள்

பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாத யாத்திரை பருவத்துடன் இணைந்து விசேட ரயில் சேவையை முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை மற்றும் காங்கேசன்துறைக்கு விசேட ரயில் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படும் கால அட்டவணையும் ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ளது.

மார்ச் 12,14,16,21,23,28 மற்றும் 31 ஆகிய திகதிகளில் கொழும்பு கோட்டையிலிருந்து இரவு 7.30 க்கு விசேட ரயில் புறப்படும்.

2025 மார்ச் 12,14,16,21,23,28 மற்றும் 31 ஆகிய திகதிகளில் பதுளையிலிருந்து மாலை 5.20க்கு விசேட ரயில் பயணத்தை ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மார்ச் 13 முதல் 31 வரை தினமும் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி காலை 5.30 க்கு விசேட ரயில் புறப்படவுள்ளது.

அத்துடன் மார்ச் 13 முதல் 31 வரை தினமும் காங்கேசன் துறையிலிருந்து பிற்பகல் 1.50 க்கு விசேட ரயில் புறப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *