கிளிநொச்சிக்குளத்தை அண்டிய பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் சுற்றுலா மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி குளத்தின் கீழ்ப்புறமாக உள்ள கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் இந்த சுற்றுலா மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி குளத்தினுள் விசைப் படகு, துடுப்பு படகு ஆகிய பொழுதுபோக்கு சேவைகள் மற்றும் பாரம்பரிய உணவுகள், இயற்கை குளிர்பானங்கள் என்பனவும் சிறுவர்களுக்கு ஏற்ற விளையாட்டுகள் என்பன இந்த சுற்றுலா மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா மையம் திறப்பு விழாவில் வடக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால், கரைச்சி பிரதேச செயலாளர் முகுந்தன், வைத்தியர்கள், அரச அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Link : https://namathulk.com