மனைவி, மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு: பதுளை, மடுல்சீமையில் சம்பவம்.

Aarani Editor
1 Min Read
உயிர்மாய்ப்பு

பதுளை, மடுல்சீமை ரோபேரி தோட்டத்தில், குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவியையும் மகளையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திவிட்டு தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பதுளை, மடுல்சீமை ரோபேரி தோட்டத்தில் இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

மடுல்சீமை பொலிஸ் பிரிவிக்குட்பட்ட பிட்டமாறுவ- ரோபேரி பகுதியில் வசிக்கும் குறித்த நபர் நேற்று இரவு தனது மனைவி மற்றும் மகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்கள் இருவரையும் கூரிய ஆயுதத்தால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் சத்தம் கேட்டு அங்கு வந்த அயலவர்கள் படுகாயமடைந்த பெண் மற்றும் அவரது மகள் ஆகிய இருவரையும் மீட்டு முச்சக்கரவண்டியில் ஏற்றிச்சென்று ரோபேரி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

படுகாயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சந்தேகநபரான குறித்த குடும்பஸ்தர் நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ளதாக பொலிசார் கூறினார்.

அயலவர்கள் சந்தேக நபரை தேடிச்சென்ற போது மரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *