வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பல இடங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல், மாகாணங்களிலும் காலி, மாத்தறை ,மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் மணித்தியாலத்துக்கு 30 -40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இந்நிலையில் நாட்டை சூழ உள்ள கடற்பிராந்தியங்களில் சீரற்ற வானிலை நிலவக் கூடும் என்பதால் மீனவர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com