அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் கடந்த 7ஆம் திகதி வெளியான திரைப்படம் ‘எமகாதகி’.
இதில் ரூபா, நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜு ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா எனப் பலர் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் மக்களிடம் வரவேற்புப் பெற்றதையடுத்து செய்தியாளர்களை படக்குழு சந்தித்துள்ளது.
குறித்த சந்தர்ப்பத்தில் நடிகை கீதா கைலாசம் தெரிவித்த கருத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
“படம் முழுவதும் எனக்கான இடம் இருந்தது. இந்தப் படத்தில் பணியாற்றிய 45 பேரும் ஒரு கிராமத்தில் ஒன்றாக இருந்தது, இனிமையான நினைவுகள். அந்த ஊர் மக்கள் நண்பர்களாகிவிட்டனர். படத்தின் நாயகி ரூபா, 35 நாட்கள் சடலமாகவே நடித்தார். அவரது அர்ப்பணிப்பு பிரமிப்பாக இருந்தது. இந்தப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம். இது என் படம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என
மிகுந்த ஆவலுடன் இருந்தோம். இது இயக்குநரின் முதல் படம் போலவே இல்லை. சிறப்பாக இயக்கியிருந்தார்” என்று அவர் தெரிவித்தார்.
Link : https://namathulk.com