அம்பாறை, சம்மாந்துறையில் விசர் நாய்க்கடி:பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சுகாதாரத் துறை

Ramya
By
1 Min Read
விசர் நாய்க்கடி

அம்பாறை, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட செந்நெல் பகுதியில் சமீபக்காலமாக கட்டாக்காலி நாய்களின் நடமாட்டம் அதிகரித்த வண்ணமுள்ளது.

இதனால், பொதுமக்களும் அதிக அசெகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் 7 பேரை கட்டாக்காலி நாய் கடித்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.

அதற்கமைய, உடனடியாக செயற்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் வைத்தியசாலைக்குச் சென்று பாதிக்கப்பட்ட நோயாளிகளை விசாரித்து, சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்றுள்ளதுடன் அப்பிரதேச இளைஞர்களால் கொல்லப்பட்ட நாயின் தலையை மீட்டு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இன்று அப் பிரதேசத்திலுள்ள கட்டாக்காலி நாய்களுக்கு தடுப்பூசி வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுமக்கள் விசர் நாய் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, 3 வயது தொடக்கம் 35 வயதுக்குட்பட்டவர்கள் இவ்வாறு விசர் நாய் கடிக்குள்ளாகியுள்ளனர்.

அதற்கமைவாக, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம். நௌசாத், பிராந்திய தொற்று நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம். ஏ. சி. எம். பஸால், மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம். லாபீர் ஆகியோரின் ஆலோசனையில் உரிய நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *