இறையாண்மைக்கு மரியாதை இருந்தால்’ டிரம்புடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தத் தயார். – கார்னி

Ramya
By
1 Min Read
கார்னி

கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் அதிகரித்து வரும் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளன,

கனடாவின் இறையாண்மைக்கு மரியாதை இருக்கும் வரை, ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் புதுப்பிக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராக இருப்பதாக கனடாவின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

ஒன்ராறியோவின் ஹாமில்ட்டனில் உள்ள ஒரு எஃகு ஆலைக்கு விஜயம் செய்தபோது கார்னி இந்த கருத்துக்களை தெரிவித்தார்,

சமீபத்திய அமெரிக்க கட்டணங்களை “நியாயமற்றது” என்று கார்னி கண்டித்தார்.

“உலகின் மிகப்பெரிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மை புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் தொடங்கப்படும்போது நாம் அனைவரும் சிறப்பாக இருக்கப் போகிறோம்” என்று அவர் கூறினார்.

கடந்த புதன்கிழமை, கனடாவின் மத்திய வங்கி நாட்டின் வட்டி விகிதங்களை 3% இலிருந்து 2.75% ஆகக் குறைத்த விடயம் முக்கியமானது.

இந்தநிலையில் வளர்ந்து வரும் வர்த்தகப் போர் இரு நாடுகளுக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *