கவனிப்பாரற்றுப்போன காரைதீவு விபுலானந்தா விளையாட்டரங்கு : அதிகாரிகளின் அசமந்த போக்கு

Ramya
By
0 Min Read
காரைதீவு விபுலானந்தா விளையாட்டரங்கு

அம்பாறை, காரைதீவு விபுலானந்த விளையாட்டு மைதானத்தில் உள்ள விளையாட்டரங்கம், மிக மோசமாக பாதிக்கப்பட்டு கவனிப்பாரற்று காணப்படுகிறது.

சுனாமிக்கு பின்னர் அரச சார்பற்ற நிறுவனமொன்றால் அமைக்கப்பட்ட இந்த நவீனரக அரங்கம் இன்று பாவிக்க முடியாத நிலையிலுள்ளது.

அரங்கத்தின் கூரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , தகரங்கள் எந்நேரமும் கீழே விழக்கூடிய அபாயம் உள்ளது.

அண்மையில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்திலும் இந்த விடயம் தொடர்பில் பேசப்பட்டது.

ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விளையாட்டு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *