காலி, அக்மீமன பகுதியில் முன்னாள் சிறை அத்தியட்சகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அக்மீமன, தலகாஹாவில் உள்ள அவரது வீட்டில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிசார் கூறினர்.
உயிரிழந்தவர், பூசா சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் என பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Link: https://namathulk.com