அவசரகால மருந்து இறக்குமதியில் போலி ஆவணங்கள் : கோப் குழுவில் வெளியாகிய தகவல்.

Ramya
By
1 Min Read
கோப் குழு

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அவசர கொள்முதல் முறையின் கீழ் மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பான போலி ஆவணங்கள் குறித்து, கோப் குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்துகளைப் பதிவு செய்யாததால் பல போலி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சவீன் செமகே குழுவிடம் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மட்டும் இதுபோன்ற 06 போலி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறிய சவீன் செமகே, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஒவ்வொரு ஆவணங்கள் தொடர்பாகவும் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாக கூறினார்.

இருப்பினும், சம்பவங்கள் குறித்து இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்று சவீன் செமகே குறிப்பிட்டார்.

மேலும், சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய, அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபனம், அத்தியாவசிய மருந்துகளை நேரடியாக இறக்குமதி செய்ய அனுமதிப்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

இதுபோன்ற முரண்பாடுகளைக் குறைப்பதற்கான தீர்வாக, இது தொடர்பாக கொள்கை முடிவு எடுப்பது அவசியம் எனவும் பிரதி பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *