பலத்த மழைக் காரணமாக சில பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்படுவதால் போக்குவரத்துகளுக்கு இடையூறும் ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் 12 ஆவது மைல் கல் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Link : https://namathulk.com