இலஞ்சம் பெற்று சிக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்.

Aarani Editor
1 Min Read
கான்ஸ்டபிள்

புத்தளம், அடிப்பல பிரதேசத்தில் 1,500 ரூபாவை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.

அடிப்பல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, பண்டாரஹேனவில் உள்ள கைசர் பைபிள் தேவாலயத்தில் நேற்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்வதற்குத் தேவையான பொலிஸ் அறிக்கையை வழங்குவதற்காக முறைப்பாட்டாளரிடம் முதலில் 2,000 ரூபா இலஞ்சம் கேட்கப்பட்டதாகவும், பின்னர் 1, 500 ரூபாவை இலஞ்சமாக கோரியதாகவும் பொலிசாரின் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *