2020 ஆம் ஆண்டு போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு எதிராக, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பித்த தடுப்பு உத்தரவு, சட்டத்தை மீறும் செயற்பாடு என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, மனுதாரரின் அடிப்படை மனித உரிமைகளை மீறியதற்காக, குறித்த பெண்ணுக்கு 100,000 ரூபா இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு போதைப்பொருள் வைத்திருந்ததாக பேலியகொட சிறப்பு புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட பெண் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர், உயர் நீதிமன்றம் இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com