பல மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மின்னல் எச்சரிக்கை – வளிமண்டலவியல் திணைக்களம்.

Sivarathan Sivarajah
1 Min Read
மின்னல் எச்சரிக்கை

பல மாகாணங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

எனவே, மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

அத்துடன், அவசர உதவிக்கு அனர்த்த முகாமைத்துவ மையத்தை பொதுமக்கள் தொடர்பு கொள்ள முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *