பாராளுமன்றக் குழுக்களின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பான ஐவரடங்கிய குழு தொடர்பில் சபாநாயகரின் அறிவித்தல்.

Sivarathan Sivarajah
1 Min Read
சபாநாயகரின் அறிவித்தல்

பாராளுமன்றக் குழுக்களின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமான சட்டரீதியான அடிப்படையைக் கண்டறிந்து அந்தப் விதப்புரைகளை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் அரசியலமைப்புக் கட்டமைப்பினுள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் வழிகாட்டும் நோக்கில் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழு தொடர்பில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

ஜனவரி 23 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவின் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இம்மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர் ஒஷானி உமங்கா குறித்த குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அதற்கமைய, அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவின் தலைமையிலான அந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பிரதி அமைச்சர் சுனில் வடகல, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அஜித் பி. பெரேரா மற்றும் ஒஷானி உமங்கா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *