புஷ்பா 3 – வெளியான புது தகவல்!

Sivarathan Sivarajah
1 Min Read
புஷ்பா 3

புஷ்பா திரைப்படத்திற்குத் தனியான இரசிகர் பட்டாளமே உள்ள நிலையில், சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த ‘புஷ்பா’ படம் 2021இல் வெளியாகி வசூலில் சாதனையை நிகழ்த்தியது. இதில் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் இத் திரைப்படம் பெற்றுக் கொடுத்தது.

இதையடுத்து ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகி 1,500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.

இந்த நிலையில் ‘புஷ்பா’ படத்தின் தயாரிப்பாளர் ரவி ஷங்கர் நிகழ்ச்சியொன்றில் ”புஷ்பா படத்தின் மூன்றாம் பாகத்தை நிச்சயமாக எடுப்போம். 3ஆம் பாகத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும். அல்லு அர்ஜுன் இரண்டு படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். அந்த படங்களை முடித்து விட்டு புஷ்பா 3ஆம் பாகத்தில் நடிப்பார். 2028ஆம் ஆண்டு புஷ்பா 3ஆம் பாகம் திரைக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார்.

Link : https://namathulk.com

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *