வவுனியா, தேவகுளத்தில் இளைஞனின் சடலம் மீட்பு – பொலிசார் தீவிர விசாரணை.

Sivarathan Sivarajah
0 Min Read
சடலம் மீட்பு

வவுனியா, தேவகுளம் வயல்வெளியில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த மணிரத்தினம் கருணா என்ற 23 வயது இளைஞனே இவ்வாறு வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரின் சடலம் காணப்படும் பகுதிக்கு அருகில் அவர் கொண்டு வந்த பை, பாதணி மற்றும் தலைக்கவசம் காணப்படுவதோடு குறித்த பகுதிக்கு வெளியில் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சடலத்தை இன்று காலை அவதானித்த பிரதேசவாசிகள் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *