இது வெறும் ஆரம்பம் மட்டுமே – நெதன்யாகு எச்சரிக்கை!

Rajan
By
1 Min Read
நெதன்யாகு

காசா மீது அண்மையில் தாக்குதல்கள் பாரதூரமாக முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் எதிர்கால போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் ‘துப்பாக்கிச் சூட்டின் கீழ் மட்டுமே நடைபெறும்’ என்று இஸ்ரேலிய தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காசாவில் ஒரே இரவில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களைக் கொன்ற விமானத் தாக்குதல்களின் அலை “ஆரம்பம் மட்டுமே” என்று பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

“இஸ்ரேலிய படைகள் ஹமாஸை “அதிகரித்து வரும் சக்தியுடன்” தாக்கும் என்றும் எதிர்கால போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் “துப்பாக்கிச் சூட்டின் கீழ் மட்டுமே நடைபெறும்” என்றும் நெதன்யாகு கூறினார். “கடந்த 24 மணி நேரத்தில் எங்கள் படைகளின் எடையை ஹமாஸ் ஏற்கனவே உணர்ந்துள்ளது, இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்று உங்களுக்கும் அவர்களுக்கும் நான் உறுதியளிக்க விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

போரின் அனைத்து இலக்குகளையும் அடைய தாங்கள் தொடர்ந்தும் போராடுவதாயும் தங்கள் பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிப்பது, ஹமாஸை ஒழிப்பது தமது நோக்கம் என்றும் மேலும் காசா இனி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்றும் நெதன்யாகு வாக்குறுதியளித்தார்.

காசாவின் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, விமானத் தாக்குதல்களில் குறைந்தது 404 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பலர் குழந்தைகள் மற்றும் 560 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் எனவும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் “பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள். ஏனெனில் ஒவ்வொரு பொதுமக்கள் உயிரிழப்பும் பெரும் சோகமானது மற்றும் ஒவ்வொரு பொதுமக்கள் உயிரிழப்பும் ஹமாஸின் தவறு” என்று குறிப்பிட்ட ரஷ்ய அதிபர் காசாவில் “அனைத்து எதிர்பாராத உயிரிழப்புகளுக்கும்” ஹமாஸ் தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

“பாலஸ்தீனிய பொதுமக்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் எந்த தொடர்பையும் தவிர்க்க வேண்டும், காசா மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன், தீங்கு விளைவிக்கும் வழியிலிருந்து வெளியேறுங்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *