மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்று தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த ஜேர்மன் பெண் ஒரு சுயேச்சைக் குழுவின் வேட்பாளராக கலேவல பிரதேச சபைக்கு போட்டியிட உள்ளார்.
இதற்கமைய, வைப்புத்தொகையை செலுத்திய பிறகு, இலங்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் நம்பிக்கையுடன் தான் போட்டியிடுவதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com