புதிய அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையின்படி, இலங்கைக்கு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை துறைமுகமான திருகோணமலை துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக துறைமுக அலுவல்கள் பிரதி அமைச்சர் ஜனிதா ருவன் கொடிதுவக்கு மற்றும் சிரியாவைச் சேர்ந்த கலாநிதி மௌசலாம் அல்-திராபி ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் கையாளுதல் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
மேலும் இந்த துறையை மேலும் விரிவுபடுத்துவதற்காக முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்த சிரியா பிரதிநிதிகள் பிரதி அமைச்சரிடம் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இலங்கையில் ஒரு புதிய Dry port உருவாக்குவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இலங்கையை கடல்சார் மையமாக மாற்றுவதே இதன் முக்கிய குறிக்கோள் எனவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Link : https://namathulk.com