பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான மின்சாதன உபகரணங்களை அவர்களின் பதவிக் காலத்தில் பயன்படுத்துவதற்கும் உரிமையாக்குவதற்குமான திட்டத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
இதன்படி, பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு, வெளியிட்ட அறிக்கையில், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலத்தில் கணினிகள், போட்டோ பிரதி இயந்திரங்கள், தொலைநகல் இயந்திரங்கள் மற்றும் கைத்தொலைப்பேசிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் குறித்த மின்சாதன உபகரணங்களை பெற்றுக்கொண்டதன் பின், பொருட்களின் தேய்மான மதிப்பு மற்றும் தவணை அடிப்படையில் பணம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
பணம் வசூலிக்கப்பட்ட பிறகு பொருட்களின் உரிமை பாராளுமன்ற உறுப்பினருக்கு மாற்றப்படும் எனவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பதவிக் காலத்தில், அவருக்கு 800,000 ரூபா ஒதுக்க அமைச்சு முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com