மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளாங்குளி கிராமத்தில் உள்ள வயலில் இருந்து உயிரிழந்த நிலையில் யானை ஒன்று நேற்று காலை மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யானை 18 வயதுடையது என தெரியவந்துள்ளது.
பிரதேச வாசிகள் வழங்கிய தகவலை தொடர்ந்து, பொலிசார், மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், வன ஜீவராசிகள் திணைக்கள வைத்தியர் ஆகியோர் குறித்த வயல் பகுதிக்குச் சென்று உயிரிழந்த யானையை பார்வையிட்டனர்.
மேலதிக விசாரணைகளில், நீண்ட காலமாக குறித்த பகுதியில் குறித்த யானை தொடர்ச்சியாக நெற்பயிரை சேதப்படுத்தி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன், மின்சாரம் தாக்கிய யானை உயிரிழந்ததாக வன ஜீவராசிகள் திணைக்கள வைத்தியர் உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் குறித்த விவசாய காணியின் உரிமையாளர் மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com