தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்று மீண்டும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
தேசபந்து தென்னகோனின் பிணை மனு மீதான தீர்ப்பை இன்று பிற்பகல் 2:00 மணிக்கு மாத்தறை நீதவான் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக தென்னகோனுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி, 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் நேற்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து சரணடைந்தார்.
சரணடைந்ததைத் தொடர்ந்து, சந்தேக நபரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் உத்தரவிட்டார்.
Link : https://namathulk.com
