இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பாக, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வங்கிக் கணக்கை முடக்கிய உத்தரவை நீக்குமாறு அவரது சட்டதரணி விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய படபெந்தி இந்த முடிவினை வழங்கியுள்ளார்.
ஏற்கனவே, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான பல வங்கிக் கணக்குகள் மற்றும் காப்பீட்டு ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்து கொழும்பு உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
ரம்புக்வெல்லவின் ஓய்வூதியம் மற்றும் அவரது வீட்டிற்கு ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட சேதத்திற்காக பெறப்பட்ட 95.9 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகை வைப்பு செய்யப்பட்ட பாராளுமனற கிளையில் உள்ள அவரது வங்கிக் கணக்கையும் இந்த உத்தரவின் கீழ் முடக்கியது.
இந்த குறிப்பிட்ட வங்கிக் கணக்கின் முடக்க உத்தரவை நீக்கக் கோரி ரம்புக்வெல்லவின் சட்டதரணி சமீபத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக முடக்க உத்தரவை நீக்குவதற்கான கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.
Link : https://namathulk.com