யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற வேளை காணாமல் போன கடற்தொழிலாளர்கள் ஐந்து நாட்களின் பின்னர் தமிழக கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம், தொண்டி மீன்பிடித்துறைமுகத்திற்கு சற்று தொலைவில் படகொன்று தத்தளித்துக்கொண்டிருந்ததை கண்ணுற்ற தமிழக கடற்படையினர் அவர்களை படகுடன் மீட்டு கரை சேர்த்தனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர்கள் இருவரும் குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், கடந்த 15ஆம் திகதி கடற்தொழிலுக்கு சென்ற சமயம் படகு இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்து வந்ததாகவும் கூறியுள்ளனர்
இருவரையும் கைது செய்துள்ள தமிழக பொலிசார், இருவரிடமும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com