எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்ற அமர்வு தினங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் மே மாதம் 6ஆம் திகதி நடைபெற உள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய மே மாத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வுகளை மே 8 மற்றும் 9ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது .
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த தினங்களுக்கான பாராளுமன்ற அலுவல்கள் பற்றி ஏப்ரல் முதல் வாரத்தில் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வு வாரத்தில் தீர்மானிப்பதற்கும் முடிவுசெய்யப்பட்டது.
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய ஏப்ரல் மாதத்திற்கான பாராளுமன்ற அமர்வுகள் ஏப்ரல் 8, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.
Link: https://namathulk.com/