யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாளுக்கான அமர்வுகள் இன்று நடை பெற்றன.
துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்றைய அமர்வுகள் நடாத்தப்பட்டன.
மரபார்ந்த பண்பாட்டு அணிவகுப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் பீடாதிபதிகள் அணிவகுத்து வர, கொடி, குடை, ஆலவட்டங்கள் சகிதம் விழா அரங்குக்கு வருகைதந்த துணைவேந்தர் அமர்வுகளுக்குத் தலைமை தாங்கிப் பட்டங்களையும், பரிசில்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
கடந்த 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பொதுப்பட்டமளிப்பு விழா நாளை நிறைவடையவுள்ளது.
இந்தப் பட்டமளிப்பு நிகழ்வில் மூவாயிரத்து 920 பேர் பட்டங்களைப் பெறவுள்ளனர்.
அத்துடன், சகல பட்டக் கற்கைநெறிகளுக்குமாக 68 தங்கப் பதக்கங்களும், 57 பரிசில்களும், நான்கு புலமைப்பரிசில்களும், வழங்கப்படவுள்ளன.
Link: https://namathulk.com